Saturday, March 23, 2019

அருகம்புல் ஜூஸ்! நல்லதா ,கெட்டதா?



எப்படி ஒரே மருந்து எல்லாவித பிரகிருதிகளுக்கும் பொருந்தாது என்பதற்கு  ஒரு அருமையான உதாரணம் அருகம்புல் ஜூஸ். காலையில்  கடற்கரையில் வாக்கிங் போகும் பலரும் அருகம்புல் ஜூஸை குடிப்பார்கள்.. இது மூலிகையில் இருந்து எடுத்த ஜூஸ் அதனால் உடம்புக்கு மிகவும் நல்லது  என்று பலரும் நினைப்பதுண்டு.
அருகம்புல் நல்லதுதான் ஆனால் யாருக்கு நல்லது? பித்த உடம்புகாரர்களுக்கு மிகவும் நல்லது. இதிகாசத்தில் இதைப்பற்றி ஒரு கதையே உண்டு .
அனலாசுரன் என்ற ஒரு அசுரனை பிள்ளையார் விழுங்க அவர் தொப்பை முழுவதும் பற்றி எரிந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது எதிலும்  குறையாத இந்த எரிச்சல் அருகம்புல் ஜூஸை குடித்ததால் குறைத்தது என்ற ஒரு குறிப்பு உண்டு.
அருகம்புல்லிற்கு "ஹீமோஸ்டேடிக்"  என்ற ஒரு குணம் உண்டு அதாவது ரத்தத்தை உறையச் செய்யும் குணம் அதனாலேயே அதிக ரத்தப்போக்கு உடைய பெண்களுக்கு அருகம்புல் ஜூஸ் குடித்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
இதய நோய் உள்ளவர்களுக்கு "பிளட் தின்னர்"  மருந்து கொடுப்பார்கள் அதாவது ரத்தம் ரத்தக்குழாய்களில் உறையாமல் இருப்பதற்கான மருந்து கொடுப்பார்கள். இதுபோன்ற மருந்தை எடுக்கும் வயதானவர்கள் உடம்புக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டு அருகம்புல் ஜூஸ் குடிக்க
அவர்கள் எடுக்கும் பிளட் தின்னரும் ,அருகம்புல் ஜூஸும் வினைப்பயன் புரிந்து உயிருக்கே வேட்டு வைக்கலாம்.
அதனால் நல்லது என்று நினைத்துக்கொண்டு கண்டதையும் சாப்பிடாமல் எந்த ஒரு மருந்தையும் மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும். அதேபோல் டிவி ஷோக்களில் வரும்  மூலிகை மருந்துகளை நமக்கு நல்லது என்று எண்ணிக்கொண்டு சாப்பிட வேண்டாம்.

No comments:

Post a Comment