Thursday, April 4, 2019

சருமம் பொலிவுடன் திகழ


‘எண்ணெய் தடவுதல்’, நமக்குப் பல வகைகளில் பலன் தருகிறது. சருமம் மெருகேறும். தேவையற்ற செல்கள் உதிர்ந்துவிடும். எண்னெய் தடவுவதால், . 50 வயதினரைக் கூட, 30 வயது என்று சொல்லுமளவு இளமைப் பொலிவு இருக்கும். சருமத்தில் சுருக்கம் விழுவது தடுக்கப்பட்டு, எப்போதும் இளமையாக இருக்கும். 

இரட்டை நாடி இருப்பவர்களும், முகத்தில் சதை இருப்பவர்களும் 30 வயதிலிருந்தே எண்ணெய் மசாஜை ஆரம்பித்துவிட வேண்டும். சிலருக்கு வெயிலில் போய்விட்டு வந்தால், உடலெல்லாம் கருத்துவிடும். நிறம் மங்கி, ‘டேன்’ ஆனவர்கள், ‘குங்குமாதி தைலத்தை’ உபயோகிக்கலாம். இது ‘ஆன்டி டேன்’ ஆக பயன்படும். தினசரி இரவு படும் முன், முகம் மற்றும் உடலில் சூரியக் கதிர்கள் படும் இடங்களிலெல்லாம் இந்தத் தைலத்தைத் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இரண்டு வாரம் தடவினாலே, வெளியில் போகும்போது சூரியனால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைந்துவிடும். 

அதேபோல, பலருக்கு அலர்ஜியும் அரிப்பும் பெரும் தொல்லையாக இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு, 45 வயதுக்கு மேல், மெனோபாஸ் ஆனபிறகு, சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. இதனால் அரிப்பும், நிறம் மாறுதலும் உண்டாகின்றன. சிலருக்கு நிறமே கருப்பாக மாறிவிடும். இதைத் டஹ்டுக்க, தோலில் ஈரப்பதம் இருக்கவேண்டும். அந்த ஈரப்பதம், எண்ணெய் தடவுவதால்தான் வரும். இவர்களுக்கு ‘தூர்வாதி தைலம்’ என்ற எண்ணெய் சிறந்த பலன் தரும். ஒருவகை தர்ப்பை புல்லைப் போட்டுக் காய்ச்சிய இந்தத் தைலத்தையும் ஏற்கெனவே குறிப்பிட்ட குங்குமாதி தைலத்தையும் ஒன்றாகக் கலந்து, கை, கால்களில் தேய்த்து வந்தால், சருமத்தில் ஏற்பட்ட கருமை மாறிவிடும். சரும வறட்சி குறைந்து, அரிப்பு நின்றுவிடும்.
சருமம் பொலிவுடன் திகழம்



No comments:

Post a Comment